மனைவியுடன் சண்டை; விளம்பரப் பலகைமீது ஏறி அமர்ந்துகொண்ட ஆடவர்

சுங்கை பூலோ: மனைவியுடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து, ஆடவர் ஒருவர் 12 மீட்டர் உயர விளம்பரப் பலகைமீது ஏறி அமர்ந்துகொண்ட சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்தது.

புங்காக் பெஸ்தாரி ஏரி அருகே அமைந்திருந்த அந்த விளம்பரப் பலகைமீது அந்த ஆடவர் ஏறி அமர்ந்துகொண்டதாக ‘தி ஸ்டார்’ செய்தி தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் உதவிகோரி தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தர் தெரிவித்தார்.

“ஒரு தீயணைப்பு வண்டியையும் தீயணைப்பு வீரர்கள் ஐவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம். அங்கு சென்று பார்த்தபோது விளம்பரப் பலகைமீது ஒருவர் அமர்ந்துகொண்டு, சத்தமிட்டபடி இருந்ததை அவர்கள் கண்டனர்,” என்று திரு முக்தர் தெரிவித்தார்.

பின்னர் அந்த ஆடவரின் மனைவியும் அவரின் நண்பர்கள் சிலரும் பலமுறை கேட்டுக்கொண்டதை அடுத்து, காலை 10.30 மணியளவில் அவர் விளம்பரப் பலகையிலிருந்து கீழே இறங்கி வந்ததாக திரு முக்தர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!