பரபரப்பான சாலையில் நடைபோட்ட காட்டரசனால் மக்கள் பேரச்சம்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில், போக்குவரத்துமிக்க சாலையில் சிங்கம் ஒன்று நடைபோட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

செவ்வாய்க்கிழமை உச்ச வேளையில், சிங்கத்தின் உரிமையாளர் அதனைத் தனது வாகனத்தில் ஏற்றிச்சென்றபோது, அது தப்பித்து, சாலையில் புகுந்ததாகக் கூறப்பட்டது.

இருப்பினும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதிகாரிகள் அதனைப் பிடித்துவிட்டனர்.

“தகவலறிந்ததும் எமது குழுக்கள் விரைந்து சென்று, சிங்கத்தைப் பிடித்தனர். இனி அச்சப்படத் தேவையில்லை,” என்று வனத்துறை ஆய்வாளர் முக்த்யார் சூம்ரோ கூறினார்.

சாலையில் சிறிது நேரம் சுற்றித் திரிந்தபின், ஒரு கட்டடத்தின் கீழ்த்தளத்தில் அச்சிங்கம் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சாலையில் சிங்கம் நடமாடியதை அடுத்து, ஊடகத்தினரும் பொதுமக்களும் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிங்கம் பிடிபட்டதைத் தொடர்ந்து, அதன் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டு, அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

பாகிஸ்தானில் சிங்கத்தைச் செல்லப் பிராணியாக வளர்ப்பது வழக்கமானதுதான் எனக் கூறப்படுகிறது.

அங்கு பெருஞ்செல்வந்தர்கள் பலர் தனியார் வனவிலங்குக் காட்சியகங்களை நடத்தி வருகின்றனர். சில வேளைகளில் அவர்கள் பொதுமக்கள் காண்பதற்காக வனவிலங்குகளை அணிவகுத்து நடத்திச் செல்வதும் உண்டு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!