தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூடானில் சந்தையில் தாக்குதல்; 40 பேர் பலி

1 mins read
6d9c6e9d-00f6-4b98-9b1b-2d44bbe2eab8
சூடானில் ஏப்ரல் 15ஆம் தேதி ராணுவத்திற்கும் அதிவேக ஆதரவுப் படைகள் என்ற அமைப்பிற்கும் இடையில் மோதல் மூண்டது. அதையடுத்து ஹஃபாயா பாலம் என்ற பாலத்திற்கு அருகே ஒம்டுர்மான் என்ற நகரில் தாக்குதல்கள் இடம்பெற்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: சூடானின் தெற்கு கார்த்தோம் என்ற பகுதியில் செயல்படும் ஒரு சந்தையில் ஆகாயத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் தொண்டூழிய அவசரகால நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையில் தெரிவித்தது.

சூடான் நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி உள்நாட்டுப் போர் வெடித்தது. அது முதல் தனி ஒரு தாக்குதலில் இந்த அளவுக்கு ஆக அதிக எண்ணிக்கையில் குடிமக்கள் இதுவரையில் கொல்லப்பட்டதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த நாட்டில் குடியிருப்புப் பகுதிகளில் மோதல் தீவிரமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்