மான்கள் சாலையைக் கடக்க உதவியவர் சுடப்பட்டார்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தான் வசித்த குடியிருப்புப் பகுதியில் மான்கள் சாலையைக் கடக்க உதவிய ஆடவரை அவ்வழியே சென்ற ஒரு மோட்டார்சைக்கிளோட்டி சுட்டுக் கொன்றார்.

அந்த ஆடவரால் தனக்கு ஆபத்து இருப்பதாக நினைத்ததால் அவரைச் சுட்டுக்கொன்றதாக மோட்டார்சைக்கிளோட்டி கூறினார்.

37 வயது டேன் ஸ்பெயத் எனும் ஆடவர், மான்கள் சாலையைக் கடப்பதை அங்கு சென்ற வாகனமோட்டிகளுக்குத் தெரியப்படுத்தும் முயற்சியில் தன் மனைவி அலிசாவுடன் ஈடுபட்டார். அப்போது அந்த வழியில் வந்த மோட்டார்சைக்கிளோட்டி திரு ஸ்பெயத்தைச் சுட்டுக் கொன்றார்.

இச்சம்பவம் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதியன்று வாஷிங்டன் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்தது.

சந்தேகப் பேர்வழியான 22 வயது டைலன் பிக்கார்ட் எனும் ஆடவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியது.

திரு ஸ்பெயத்தும் அவரின் மனைவியும் சாலையை மறைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது தான் அஞ்சியதாகவும் அவர்களைத் துரத்த எண்ணம் கொண்டதாகவும் பிக்கார்ட் கூறினார் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் சொன்னது.

எனினும், ஆபத்து இருப்பதாக எவ்வித அறிகுறியும் இல்லாத சூழலில்தான் பிக்கார்ட் துப்பாக்கியால் சுட்டார் என்று நீதிமன்ற ஆவணம் தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!