ஜோகூரில் புகைமூட்டம்: மக்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்து

ஜோகூர் பாரு: ஜோகூரில் பல இடங்களில் புகைமூட்டம் காரணமாக காற்றுத் தூய்மைக்கேடு அதிகமாகிவிட்டது.

ஆகையால், முகக்கவசத்தைப் பயன்படுத்தும்படி மாநில, மத்திய சுகாதாரக் குழுவின் தலைவர் லிங் டியான் சூன் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

ஜோகூர் மாநிலத்தில் ஐந்து பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு அதிகமாகிவிட்டதாக அவர் கூறினார்.

தெங்காக், செகாமட், பத்து பகாட், லார்கின், பாசிர் கூடாங் ஆகியவை அந்த ஐந்து பகுதிகள் என்று திங்கட்கிழமை அவர் தெரிவித்தார்.

இதர மூன்று பகுதிகளிலும் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காற்றுத்தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்றுத்தரம் நல்ல நிலையில் இருக்கிறது என்று பொருள்.

காற்றுத் தர அளவு 51 முதல் 100 வரை எனில் தரம் மிதமான நிலையை எட்டி இருக்கிறது என்றும் 101 முதல் 200வரை எனில் மோசம் என்றும் 201 முதல் 300 வரை என்றால் மகாமோசம் என்றும் 300ஐத் தாண்டினால் ஆபத்து என்றும் மலேசியாவின் சுற்றுப்புற அமைச்சின் கணக்கீடு தெரிவிக்கிறது.

காற்றுத் தரம் மோசமடைவதால் வெளியே செல்லும்போது முகக்கவசத்தை அணியும் படி திரு லிங் வலியுறுத்தினார். குறிப்பாக சுவாசப் பிரச்சினை இருப்போர் மிகக்கவனமாக இருந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!