சவூதி அரேபியா, கத்தாருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் தென்கொரிய அதிபர்

சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சனிக்கிழமை (அக். 21) அவர் தமது பயணத்தைத் தொடங்கினார்.

வர்த்தக ஒத்துழைப்பு குறித்தும் மத்திய கிழக்கில் நெருக்கடி நிலவும் வேளையில் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் அவர் அந்நாட்டுத் தலைவர்களுடன் கலந்துரையாடுவார் என்று கூறப்பட்டது.

தமது பயணத்தின் முதற்கட்டமாக சவூதி அரேபியா செல்லும் அதிபர் யூன், சவூதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை ஞாயிற்றுக்கிழமை சந்திப்பார்.

அக்டோபர் 24, 25ஆம் தேதிகளில் கத்தாருக்குச் செல்லும் தென்கொரிய அதிபர் அங்கு நடைபெறும் உச்சநிலை மாநாட்டிலும் வர்த்தகக் கருத்தரங்கிலும் கலந்துகொள்வார்.

ஓராண்டுக்குமுன் சவூதி இளவரசர் தென்கொரியா சென்றிருந்தபோது எரிசக்தி, தற்காப்பு, உள்கட்டமைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்துக் கலந்துரையாடப்பட்டது. கொரிய நிறுவனங்களுடன் $30 பில்லியன் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!