ஷாங்காய்: உலகின் மிகப் பெரிய விளம்பர நிறுவனங்களில் ஒன்றான டபிள்யூபிபி நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரும் முன்னாள் ஊழியர்கள் இரண்டு பேரும் சீனாவில் கைதாகி இருகிறார்கள்.
ஷாங்காயில் செயல்படும் அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கைதானவர்கள் அந்த நிறுவனத்தின் குரூப் எம் ஊடக வர்த்தகப் பிரிவு சம்பந்தப்பட்டவர்கள் என்று இரண்டு பேர் தெரிவித்தனர்.
அந்த இருவரும் தங்கள் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதன் தொடர்பில் கருத்து கூற டபிள்யூபிபி மறுத்துவிட்டது.
லண்டனில் செயல்படும் சீனத் தூதரகத்திடம் கேட்டபோது அதுவும் மறுத்துவிட்டது. இந்த விவகாரம் பற்றி ஃபைனான்ஷியல் டைம்ஸ் செய்தித்தாள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டு இருந்தது.
டபிள்யூபிபி விளம்பர நிறுவனம் 2022ஆம் ஆண்டில் ஈட்டிய வருவாயில் 5% வரை சீனாவிலும் தைவானிலும் கிடைத்தவை என்று அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை கூறியது.

