அன்வார்: இஸ்ரேல்-பாலஸ்தீன பூசலில் மலேசியாவுக்கு அமெரிக்கா நெருக்குதல்

கோலாலம்பூர்: இஸ்ரேல்-பாலஸ்தீன பூசலில் மலேசியா அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்த அமெரிக்கா அதற்கு நெருக்குதல் அளிக்க முற்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கேள்வி-பதில் அங்கத்தில் பேசிய திரு அன்வார், “அமெரிக்காவுக்கான மலேசியத் தூதரை அழைத்த அமெரிக்க அதிகாரிகள், பூசல் குறித்து எங்கள் நிலைப்பாட்டை அறிய முற்பட்டனர். எங்கள் நிலைப்பாட்டை எங்களின் தூதர் உறுதிப்படக் குறிப்பிட்டார்,” என்றார்.

ஹமாஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்க மலேசியா மறுத்ததால், காஸா பூசல் குறித்து அமெரிக்கா அறிய முற்பட்டதாக திரு அன்வார் விளக்கமளித்தார்.

மலேசியாவின் தன்னிச்சையான நிலைப்பாட்டை மறுஉறுதிப்படுத்திய அவர், மனிதாபிமான உதவிகள் குறித்து மலேசியா உறுதியாக இருக்கும் என்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு மலேசியா கண்டனம் தெரிவிக்கும் என்றும் சொன்னார்.

உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குத் தெரிவிக்கப்பட்ட கண்டனம், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்றும் திரு அன்வார் கூறினார். பல்லாண்டு காலமாக இடம்பெறும் இஸ்ரேல்-பாலஸ்தீன பூசலுக்கு குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்காததை அவர் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!