அலாஸ்கா ஏர்லைன்ஸ்மீது வழக்கு தொடுத்த பயணிகள்

சியேட்டல்: அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின்மீது மூன்று பயணிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பணியில் இல்லாத ஒரு விமானி, காக்பிட் அறையில் உள்ள ஜம்ப் சீட் எனும் கூடுதல் இருக்கையில் உட்கார்ந்திருந்தபோது விமானத்தின் எஞ்சின் இயந்திரங்களைச் செயலிழக்க வைக்க முயன்றதாக நம்பப்படுகிறது. அதற்காக வியாழக்கிழமையன்று அந்த மூன்று பயணிகள் அலாஸ்கா ஏர்லைன்ஸ்மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

அந்நிறுவனம், விமானப் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியது என்பது அந்தப் பயணிகளின் வாதம்.

இச்சம்பவம் அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 2059ல் நிகழ்ந்தது. அந்த விமானம் வா‌ஷிங்டனின் எவரெட் பகுதியிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் இருந்த எல்லா பயணிகளின் சார்பாகவும் தாங்கள் வழக்கு தொடர்ந்ததாக அந்த மூன்று பயணிகளும் கூறினர். வா‌‌ஷிங்டன் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!