பாப்புவா நியூ கினி எரிமலைக் குமுறல்: விமானச் சேவைகள் ரத்து, பொதுமக்கள் வெளியேற்றம்

போர்ட் மோர்ஸ்பி: பாப்புவா நியூ கினியில் எரிமலை ஒன்று குமுறியதால் அந்நாட்டில் செவ்வாய்க்கிழமையன்று குடியிருப்பாளர்கள் சிலர் வீடுகளிலிருந்து வெளியேறத் தயாராகி வந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் குமுறிவரும் உலாவுன் எரிமலை அமைந்துள்ள நியூ பிரிட்டன் தீவைச் சேர்ந்தவர்கள். திங்கட்கிழமையன்று எரிமலை குமுறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு உதவ மீட்புக் குழுக்கள் அங்கே அனுப்பப்பட்டன. பேரிடர் நிர்வாக அதிகாரி கிளெமன்ட் பெய்லி இதைத் தெரிவித்ததாக பாப்புவா நியூ கினி அரசாங்கத்துக்குச் சொந்தமான என்பிசி பிஎன்ஜி ஊடகம் குறிப்பிட்டது.

நியூ பிரிட்டன் தீவில் உள்ள ஹொஸ்கின்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் எரிமலை தொடர்ந்து குமுறி வருவதாகவும் என்பிசி பிஎன்ஜி தெரிவித்தது.

பாப்புவா நியூ கினி, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. பசிபிக் வட்டாரத்தில் அமைந்துள்ள அப்பகுதியில் பல எரிமலைகள் இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!