தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே

1 mins read
5c9cf8a7-174b-4405-98fd-32d4a7e918ef
நண்பர்கள் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் மாட்டு வண்டியில். - படம்: தமிழக ஊடகம்

தமிழ்நாடு: செட்டிப்பாளையம் அருகில் தம்பதிகள் பாரம்பரியத்தை காக்க மாட்டுவண்டியில் புதுமனைக்கு திருமணக்கோலத்தில் சென்றது அங்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனந்தகுமார்-பவதாரணி ஆகியோர் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை மாட்டுவண்டியை ஓட்டிவர அருகில் மணப்பெண் மகிழ்ச்சியில் திளைத்தபடி அவர்களது புது இல்லத்துக்கு செல்லும் காணொளியைப் பலர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.

பொதுப் பொறியியல் துறையில் பட்டதாரியான ஆனந்தகுமார், விவசாயத்தின் அத்தியாவசியத்தை இளையதலைமுறையினருக்கு உணர்த்தவே மாட்டுவண்டி சவாரியை தமது திருமணத்தில் மேற்கொண்டதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்