போப்பாண்டவருக்கு நுரையீரல் தொற்று; ஞாயிறு உரையை உதவியாளர் வாசித்தார்

வத்திகன்: போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தனக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகக் கூறி வழக்கமாக தனது ஞாயிறு உரையை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வழங்குவதற்கு பதிலாக தனது இல்லத்தில் உள்ள பிரார்த்தனைக் கூடத்தில் இருந்து வழங்கினார்.

அவருக்குப் பதிலாக அவரது உரையை உதவியாளர் ஒருவர் வாசித்தார்.

போப்பாண்டவர் ஃபிரான்சிஸ், வயது 86, தனது வலது கையில் கட்டுப்போட்டுக் கொண்டு வழக்கமான வெண்மை நிற ஆடை அணிந்து அமர்ந்திருக்க, அவர் அருகில் அமர்ந்து அவரது உரையை உதவியாளர் வாசித்தார்.

“எனது அருமை சகோதர, சகோதரிகளே, ஞாயிறு வாழ்த்துகள். எனக்கு நுரையீரல் தொற்று இருப்பதால், இன்று என்னால் மாடத்தில் இருந்து உங்களைக் காண்பது முடியாது,” என்று போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் கூறினார்.

முன்னதாக, போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் நவம்பர் 25ஆம் தேதி சளிக்காய்ச்சல் வந்தபின் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டு தனக்கு நுரையீரல் தொற்று ஏதும் இல்லை என்று கூறியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!