தைவான் நீரிணையின் அமைதிக்கு ஒற்றுமை முக்கியம்: அமெரிக்கா

சோல்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தைவான் நீரிணையின் நிலைத்தன்மைக்கு வா‌ஷிங்டன்னும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சுதந்திரமான கடல் நடவடிக்கைகள் இடம்பெற வா‌‌ஷிங்டன் உறுதுணையாக இருக்கும் என்பதையும் அவர் மறுவுறுதிப்படுத்தினார்.

ஜப்பான், தென்கொரிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை சோலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த கருத்தை ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.

சீனா, தைவான் நீரிணையில் அவ்வப்போது அதன் ராணுவக் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்புகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

தைவானை தன்னுடைய இடம் என்று கூறும் சீனா, அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இலக்கு கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2027ஆம் ஆண்டு வாக்கில் அதற்கான முழு நடவடிக்கையை சீனா எடுக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமெரிக்கா தைவானுடனான அரசதந்திர உறவை வலுப்படுத்திவருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!