ஆயிரக்கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள்; அதிர்ச்சியில் மீனவர்க் கூட்டம்

ஹொக்காய்டோ: ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குக் கடற்கரை எங்கும் டன் கணக்கில் இறந்த மீன்கள். அதுவும், ஆயிரக்கணக்கில்.

ஜப்பானின் ஹொக்காய்டோவில் இவ்வாறு ஆயிரக்கணக்கான ‘சார்டின்’ எனப்படும் மத்தி மீன்களும் கானாங்கெளுத்தி மீன்களும் கரை ஒதுங்கிய சம்பவம் உள்ளூர் மீனவர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹொக்கோடேட்டில் உள்ள டொய் மீன்பிடித் துறைமுகம் அருகே கரைமீது மீன்கள் டிசம்பர் 7ஆம் தேதியன்று காலைவேளையில் காணப்பட்டன.

திடீரென்று மீன்களுக்குச் சுவாச வாயு போதாமல் போயிருக்கலாம் என்ற ஊகம் எழுந்துள்ளது.

இவ்வாறு நடந்ததற்குக் காரணம் என்ன, மீன்களை எவ்வாறு அகற்றுவது என மாநில அரசாங்கம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

குறைந்தது 1,000 டன்கள் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மணலால் மூடப்பட்ட அந்த மீன்களைச் சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கையும் மக்களுக்கு விடுக்கப்பட்டது.

இதற்கிடையே, குளிர்ந்த பகுதிக்குள் வந்ததனால் மீன்கள் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் இறந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!