கொழும்பு: இலங்கையில் டிசம்பர் 9ஆம் தேதி, நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடையால் அந்நாடே இருளில் மூழ்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு அதற்குக் காரணம் என்று இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் மெதுவாக வழக்க நிலைக்குத் திரும்புவதாக உள்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. சிலோன் மின்வாரியத்தை மேற்கோள்காட்டி அவை அந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.