பயணிக்கு விமானச் சிப்பந்தி உணவூட்டியதற்கு மாறுபட்ட கருத்துகள்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்றில் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனுக்கு முன்னால் மண்டியிட்டு விமானச் சிப்பந்தி கரண்டியால் அவனுக்கு உணவூட்டுவதைக் காட்டும் இன்ஸ்டகிராம் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

ஆனால், நல்லெண்ணத்தில் அந்தச் சிப்பந்தி மேற்கொண்ட இச்செயல், இணையவாசிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடமைக்கு அப்பாற்பட்டு அந்தச் சிப்பந்தியின் நற்செயலை சிலர் பாராட்டினாலும், சிறுவனுக்கு உணவூட்டுவது அவரது கடமையன்று என்று வேறு சிலர் கருத்துரைத்தனர்.

அச்சிப்பந்தி உணவூட்டியபோது காதில் ‘ஹெட்ஃபோன்’ கருவியை அணிந்திருந்த அச்சிறுவனின் கவனம் மின்னிலக்கச் சாதனத்தில் மூழ்கியிருந்தது.

டிசம்பர் 5ஆம் தேதி பகிரப்பட்ட அக்காணொளி, இதுவரை 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

விமானச் சிப்பந்தியின் செயல் தேவையில்லாதது என்று கருதிய ஒருவர், “அச்சிறுவன் சொந்தமாக உணவருந்த முடியாத குழந்தை அல்லன். பயணிகளின் பாதுகாப்புக்காக விமானச் சிப்பந்திகள் உள்ளனர், குழந்தையைப் பராமரிப்பதற்கு அன்று,” என்றார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்குச் சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தின் ‘பிசினஸ் கிளாஸ்’ பிரிவில் தன் தந்தையுடன் அச்சிறுவன் பயணம் செய்தான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!