சூறாவளியில் சிக்கிய 4 மாதக் குழந்தை: சாய்ந்த மரத்தில் படுத்திருந்தது

டென்னசி: டிசம்பர் 9ஆம் தேதியில் சூறாவளிக் காற்று அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் கிளார்க்ஸ்வில் நகரைத் தாக்கியது.

அதில் சிக்கிச் சீரழிந்தது திருவாட்டி சிட்னி மோர் என்பவரின் தற்காலிக வீடு. சூறாவளியில் 10 நிமிடங்களுக்கு சிக்கித் தவித்த திருவாட்டி மோர், அவர் காதலர் அராமிஸ் யங்பிளட் குடும்பம் செய்வதறியாது தவித்தது.

சூறராவளி தாக்கிவிட்டுச் சென்றபின் அவர்களது இரண்டாவது செல்வன், நான்கு மாத கைக்குழந்தை லார்ட்டை காணவில்லை.

லார்ட் தொட்டிலில் படுத்துறங்கியபோது சூறாவளி தாக்கியது. பதறிய அராமிஸ் யங்பிளட், 39, லார்ட்டை பாதுகாக்க ஓடினார். ஆனால், சூறாவளிக் காற்று வீட்டுக் கூரையை பிய்த்து எறிந்தபின் அவரும் குழந்தை லார்ட்டும் வீட்டுக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டனர் என்கிறது சிஎன்என் செய்தித் தகவல்.

“சூறாவளி வீசிய நேரத்தில் யங்பிளட் குழந்தை லார்ட்டின் தொட்டிலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தார். அவரும் குழந்தையும் சூறாவளியில் சுழன்று சுழன்று சென்றனர்,” என்று திருவாட்டி மோர், 22, நடந்ததை நினைவுகூர்ந்தார்.

முடிவில் தோள்பட்டை எலும்பு பிசகிய நிலையில் திரு யங்பிளட் குப்பைக் கூளத்துக்கு நடுவே, அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக வீடு இருந்த இடத்திலிருந்து 9 மீட்டர் தூரம் தள்ளி, சாய்ந்த மரத்தின் மீது குழந்தை லார்ட் அழுத நிலையில் படுத்திருப்பதை கண்டதாக கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!