அரியணை துறக்கும் டென்மார்க் அரசியார்

கோபன்ஹேகன்: டென்மார்க் அரசியார் இரண்டாம் மார்கரெட், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்குப் புத்தாண்டுச் செய்தி விடுத்தபோது திடீரென்று தாம் அரியணையைத் துறக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

ஜனவரி 14ஆம் தேதி அவர் அதிகாரபூர்வமாக தமது முடியுரிமையைத் துறப்பார் என்று கூறப்படுகிறது.

அன்றோடு அவர் அரியணை ஏறி 52 ஆண்டுகள் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

83 வயதாகும் டென்மார்க் அரசியார், உலகிலேயே ஆட்சியில் இருக்கும் ஒரே அரசியார் என்ற சிறப்புக்கு உரியவர். ஐரோப்பாவில் நீண்டகாலம் அரியணையில் வீற்றிருப்பவர் என்ற சிறப்பும் அவரைச் சாரும்.

1972ஆம் ஆண்டு அவரது கணவரும் அப்போதைய டென்மார்க் மன்னருமான ஒன்பதாம் ஃபிரெடரிக் காலமானதைத் தொடர்ந்து அரசியார் இரண்டாம் மார்கரெட் அரசியாகப் பொறுப்பேற்றார்.

அரசியாருக்குப் பிறகு அவருடைய மகனும் பட்டத்து இளவரசருமான 55 வயது ஃபிரெடரிக் டென்மார்க்கின் மன்னாராகப் பதவியேற்பார்.

பிரிட்டிஷ் அரச குடும்பப் பாரம்பரியத்தைப்போல் டென்மார்க்கில் ஆடம்பரமான பதவியேற்பு விழா இடம்பெறாது. அவர் பதவியேற்கும் நாளில் கோபன்ஹேகன் அரண்மனை அதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!