ஜப்பான் நிலநடுக்கம்: தப்பித்தோரை அச்சுறுத்தும் கடுங்குளிர், நிலச்சரிவு அபாயம்

தோக்கியோ: அண்மையில் ஜப்பானைப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை ஜனவரி மாதம் 3ஆம் தேதியன்று 62ஆக அதிகரித்தது.

இந்நிலையில், நிலநடுக்கத்திடமிருந்து தப்பித்தோர் துயர்துடைப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தின் சீற்றத்திலிருந்து தப்பித்த அவர்கள் கடுங்குளிராலும் கனமழையாலும் அவுதயுறக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனவே, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க ஜப்பானிய அதிகாரிகள் விரைந்து செயல்படுகின்றனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதனால் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகள் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

நிலநடுக்கம் காரணமாக மிகக் கடுமையாகச் சேதமடைந்த சாலைகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றால் மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!