நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து 5 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட 90 வயது மூதாட்டி

ஜப்பான்: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாள்களுக்குப் பிறகு, இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மீட்கப்பட்டுள்ளார்.

சுசு பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த ஒரு வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர், ஜனவரி 6ஆம் தேதி மீட்கப்பட்டார்.

வழக்கமாக, பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கத்திற்கு மூன்று நாள்களுக்குப் பிறகு யாரையும் உயிருடன் மீட்பதற்கான நம்பிக்கை மறையத் தொடங்கும். ஆனால் ஐந்து நாள்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்த இந்த மூதாட்டியை, கடுமையான மழைக்கு இடையில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த முதிய பெண்மணி, மருத்துவர்களின் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிப்பதாக என்எச்கே ஒலிபரப்புக் கழகம் தெரிவித்தது.

இருப்பினும், பனி, புயல் ஆகியவற்றால் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 7) மீட்புப் பணிகள் சிக்கலை எதிர்கொள்ளக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் மழை, குளிர், பனிப்பொழிவு ஆகியவை ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!