தெற்கு குரில் தீவுகளுக்குச் செல்வேன்: புட்டின்

மாஸ்கோ:  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், தெற்குக் குரில் தீவுகளுக்குப்  நிச்சயம் ஒரு நாள் பயணம் செய்யப் போவதாக கூறியுள்ளார். 

இத்தீவுகளுக்கும் ஜப்பானுக்கும் இடையே இரண்டாம் உலகப் போரின் இறுதியிலிருந்து சர்ச்சைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.  

சோவியத் படை, ஜப்பானின் ஹொக்கைடோவிடமிருந்து இந்நான்கு தீவுகளையும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றியது. 

அது முதல், அவை மாஸ்கோவின் வசம் உள்ளது. அதனால், அந்த இரு நாடுகளாலும் அமைதி உடன்பாட்டைக் கடைபிடிக்க முடியவில்லை. 

ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமான கபரோவ்ஸ்கில் நடந்த கூட்டத்தில், தெற்கு குரில்களில் ஒன்றான குனாஷிர் தீவு பற்றி புட்டினிடம் கேட்டபோது அவர், அத்தீவுகளில் சுற்றுப்பயணத்துறையை  மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்குரில் தீவுகள் வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளன.

மேலும், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் தெற்கு முனையிலிருந்து தெற்கு ஜப்பானிய தீவு ஹொக்கைடோ வரை 1,250 கிலோமீட்டர் தூரம் உள்ளன. 

இவ்வாறு, ஓகோட்ஸ்க் கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே ஒரு நேர்த்தியான எல்லையை உருவாக்கி அமைகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!