மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், தெற்குக் குரில் தீவுகளுக்குப் நிச்சயம் ஒரு நாள் பயணம் செய்யப் போவதாக கூறியுள்ளார்.
இத்தீவுகளுக்கும் ஜப்பானுக்கும் இடையே இரண்டாம் உலகப் போரின் இறுதியிலிருந்து சர்ச்சைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
சோவியத் படை, ஜப்பானின் ஹொக்கைடோவிடமிருந்து இந்நான்கு தீவுகளையும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றியது.
அது முதல், அவை மாஸ்கோவின் வசம் உள்ளது. அதனால், அந்த இரு நாடுகளாலும் அமைதி உடன்பாட்டைக் கடைபிடிக்க முடியவில்லை.
ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமான கபரோவ்ஸ்கில் நடந்த கூட்டத்தில், தெற்கு குரில்களில் ஒன்றான குனாஷிர் தீவு பற்றி புட்டினிடம் கேட்டபோது அவர், அத்தீவுகளில் சுற்றுப்பயணத்துறையை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்குரில் தீவுகள் வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளன.
மேலும், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் தெற்கு முனையிலிருந்து தெற்கு ஜப்பானிய தீவு ஹொக்கைடோ வரை 1,250 கிலோமீட்டர் தூரம் உள்ளன.
இவ்வாறு, ஓகோட்ஸ்க் கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே ஒரு நேர்த்தியான எல்லையை உருவாக்கி அமைகின்றன.