ஹனோய்: பல நாட்களாக தனது உடல்நிலை தொடர்பில் எழுந்த அக்கறைகளுக்குப் பிறகு, வியட்நாமின் உயர்மட்டத் தலைவரும்,கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான இங்குயென் ஃபுட்ரோங் ஜனவரி 15ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில்,வியட்நாம் தலைவர்கள் இந்தோனீசிய பிரதமர் ஜோகோ விடோடோவையும் லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபாண்டோனையும் சந்தித்த கூட்டத்தில் திரு ட்ரோங், 79, கலந்துகொள்ளவில்லை.
இது அவரது உடல்நிலை குறித்து பரவலான ஊகங்களுக்கு வழிவகுத்தது.
அரசாங்க ஊடகங்கள் வலைத்தளங்களில் திரு ட்ராங் மற்ற தலைவர்களுடன் சிரித்து நாடாளுமன்றத்தில் நிற்பது போன்ற படங்களை காட்டி அவருக்கு முக்கியத்துவமளித்தன.
நாடாளுமன்றத்தில் நடந்த தொடக்க உரைக்குப் பிறகு, திரு ட்ராங், உதவியுடன் அங்கிருந்து வெளியேறியதைப் பற்றி ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
திரு ட்ராங் 2011லிருந்து ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக உள்ளார். அவர், வியட்நாமின் ஒரு கட்சி அரசியல் அமைப்பில் உயர் பதவியையும் பெற்றுள்ளார்.