ஹாலிவுட் பிரபலம் ஆர்னல்ட் ஷ்வார்சனேகர் மீது சுங்கத் துறை நடவடிக்கை

மியூனிக்: ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஆர்னல்ட் ஷ்வார்சனேகர், 76, ஜனவரி 17ஆம் தேதி, ஜெர்மனியின் மியூனிக் நகர விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வைத்திருப்பது குறித்து சுங்கத் துறைக்குத் தெரிவிக்கத் தவறியதற்காக அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்காவிலிருந்து ஜெர்மனி வந்த அவர், தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படக்கூடும் என்றும் அந்தக் கைக்கடிகாரம் பறிமுதல் செய்யப்படும் என்றும் சுங்கத்துறை கூறியது.

அந்த ஆடம்பரக் கைக்கடிகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பதற்கு அவர் திட்டமிட்டிருந்ததால் அதற்கு வரி செலுத்தியிருக்க வேண்டும் என்று அது கூறியது.

அந்தக் கைக்கடிகாரத்தை, பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் ஜனவரி 18ஆம் தேதி திரு ஷ்வார்சனேகர் ஏலத்தில் விற்கத் திட்டமிட்டிருந்தார்.

உலக அளவில் பிரபலமான முன்னாள் உடற்கட்டழகர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில முன்னாள் ஆளுநர் போன்ற சிறப்புகளைப் பெற்ற அவர் மீது வரி ஏய்ப்பு தொடர்பில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!