காதலிலே தோல்வியுற்றார்; ஆடைகளைத் துறந்து நடந்தார்

ஜோகூர் பாரு: பொது இடத்தில் ஆடைகளின்றி காணப்பட்ட 37 வயது ஆடவர் ஒருவரை ஜோகூர் பாரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆடவர் ஜனவரி 19ஆம் தேதியன்று பின்னிரவு 1.38 மணிக்குக் கைதானதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆடவர் ஆடை எதுவும் அணியாமல் இங்குமங்கும் நடந்துகொண்டிருப்பதாக 26 வயது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து கூறப்பட்ட அந்தப் பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.

தன்னுடைய காதலி தன்னை விட்டுப் பிரிந்த துயரை ஆடவரால் தாங்க முடியவில்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த ஆடவர் மதுபானம் அருந்தியதாகவோ போதைப்பொருள் உட்கொண்டதாகவோ தெரியவில்லை என்றும் இதற்குமுன் அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததில்லை என்றும் கண்டறியப்பட்டது.

இதற்கிடையே, ஆடவர் ஆடைகளின்றி வலம்வருவதைக் காட்டும் காணொளி பரவலாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!