வெளிநாட்டு வங்கிகள் மீது வழக்கு தொடுக்க மலேசியா பரிசீலனை

கோலாலம்பூர்: மலேசியா பல பில்லியன் டாலர் 1எம்டிபி மோசடியில் தொடர்புடைய வெளிநாட்டு வங்கிகள் மீது சட்டப்படி வழக்குத் தொடர உத்தேசித்து வருகிறது.

இதை 1எம்டிபி சொத்து மீட்புப் பணிக்குழுவின் தலைவர் ஜோஹாரி அப்துல் கானி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) அன்று தெரிவித்தார்.

எந்தெந்த வங்கிகள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றபோதிலும் அந்த வங்கிகள் 1எம்டிபி சுயாதிபத்திய நிதியிலிருந்து பணப் பட்டுவாடா செய்யுமுன் அதற்கு முன் செய்யவேண்டிய முறையான ஆய்வை மேற்கொள்ளவில்லை என்று அவர் விளக்கினார்.

1எம்டிபி நிதியிலிருந்து கிட்டத்தட்ட US$4.5 பில்லியன் அளவுக்கு களவாடப்பட்டிருப்பதாக மலேசிய, அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் முன்னாள் மலேசியப் பிரதமர் ஒருவர், கோல்ட்மன் சாக்ஸ் அதிகாரிகள், மற்ற நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. மோசடியில் தனக்கு பங்கு இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து கோல்ட்மன் சாக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு US$3.9 பில்லியன் இழப்பீடு தர ஒப்புக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!