கோலாலம்பூர்: மலேசியா பல பில்லியன் டாலர் 1எம்டிபி மோசடியில் தொடர்புடைய வெளிநாட்டு வங்கிகள் மீது சட்டப்படி வழக்குத் தொடர உத்தேசித்து வருகிறது.
இதை 1எம்டிபி சொத்து மீட்புப் பணிக்குழுவின் தலைவர் ஜோஹாரி அப்துல் கானி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) அன்று தெரிவித்தார்.
எந்தெந்த வங்கிகள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றபோதிலும் அந்த வங்கிகள் 1எம்டிபி சுயாதிபத்திய நிதியிலிருந்து பணப் பட்டுவாடா செய்யுமுன் அதற்கு முன் செய்யவேண்டிய முறையான ஆய்வை மேற்கொள்ளவில்லை என்று அவர் விளக்கினார்.
1எம்டிபி நிதியிலிருந்து கிட்டத்தட்ட US$4.5 பில்லியன் அளவுக்கு களவாடப்பட்டிருப்பதாக மலேசிய, அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் முன்னாள் மலேசியப் பிரதமர் ஒருவர், கோல்ட்மன் சாக்ஸ் அதிகாரிகள், மற்ற நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. மோசடியில் தனக்கு பங்கு இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து கோல்ட்மன் சாக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு US$3.9 பில்லியன் இழப்பீடு தர ஒப்புக்கொண்டது.