‘வழக்கத்திற்கு மாறான நாற்றம்’ காரணமாக மீண்டும் திரும்பிய விமானம்

ஹாங்காங்: ஹாங்காங்கிலிருந்து கிளம்பி சில நிமிடங்களே ஆன கேத்தே பசிபிக் விமானம் ஒன்றில் ‘வழக்கத்திற்கு மாறான நாற்றம்’ இருந்ததை அடுத்து அது பினாங்குக்குச் செல்லாமல் மீண்டும் ஹாங்காங்கிலேயே தரையிறங்கியது.

விமானம் ஜனவரி 28ஆம் தேதியன்று காலை 8.15 மணியளவில் ஹாங்காங்கிலிருந்து கிளம்பி, நண்பகல் 12 மணியளவில் பினாங்கை அடைவதாக இருந்தது என்று பேங்காங் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இருப்பினும், விமான அறையில் இருந்த நாற்றத்தால் விமானத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானி மீண்டும் திருப்பியதாகக் கூறப்படுகிறது.

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தைக் காலை 8.53 மணிக்கு விமானம் அடைந்த நிலையில், அதிலிருந்த பயணிகளுக்கும் விமானச் சிப்பந்திகளுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்தது.

பயணிகள் மீண்டும் நண்பகல் 12.30 மணிக்கு மற்றொரு விமானத்தில் பினாங்கை நோக்கிச் செல்ல முடிந்ததாக அறியப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட விமானம் முழுமையாகச் சோதனையிடப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!