கலிஃபோர்னியாவில் கூடுதல் வெள்ளம், நிலச்சரிவு அபாயம்

லாஸ் ஏஞ்சலிஸ்: தென்கலிஃபோர்னியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பிப்ரவரி 6ஆம் தேதியன்று கனமழை பெய்தது.

இதனால் அம்மாநிலத்தில் கூடுதல் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

பிப்ரவரி 5ஆம் தேதியன்று கலிஃபோர்னியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கனமழை பெய்தது.

பிப்ரவரி 6ஆம் தேதியன்று ஆரஞ்சு கவுன்ட்டி கடலோரப் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சான் டியாகோவிலும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியிலும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

லாஸ் ஏஞ்சலிசில் பிப்ரவரி 5ஆம் தேதி இரவு நிலவரப்படி கனமழை, பலத்த காற்று காரணமாக 250க்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. அந்நகரில் 380க்கும் அதிகமான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 6ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் மட்டும் 156,000 பேர் மின்சாரம் இன்றி தவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!