மணிலா: தெற்கு பிலிப்பீன்சில உள்ள கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டு 60 மணிநேரம் கழித்து சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இது அதிசயம் என்று மீட்புப் பணியாளர்கள் கொண்டாடும் வேளையில், அங்கு மேலும் பலர் உயிருடன் மீட்கப்பட வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையைப் பலருக்கு ஏற்படுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட சிறுமியின் வயது வெளியிடப்படவில்லை. ஆனால், மழையால் மசாரா என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கு காணாமல்போன 100 பேரில் இந்தச் சிறுமியும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.
நிலச்சரிவில் 15 மரணமடைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு மிண்டானோ தீவில் மீட்புப் பணியாளர்கள் தங்கள் கைகளையும், மண்ணை வாரும் கருவிகளாலும் தேடியபோது அந்தச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார் என்று துயர் மீட்புப் பணி அமைப்பைச் சேர்ந்த எட்வர்ட் மக்காபில்லி தெரிவித்தார்.
“இது ஓர் அதிசயம் என்று கூறிய திரு மக்காபில்லி, காணாமல்போனவர்கள் இறந்திருப்பர் என்று மீட்புப் பணியாளர்கள் நம்பிக்கை இழந்திருந்தனர்.
“இது மீட்புப் பணியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. ஏனெனில், பிள்ளைகளுக்கு தாக்குப் பிடிக்கும் திறன் பெரியவர்களைவிடக் குறைவு,” என்று அவர் தெரிவித்தார்.