பிலிப்பீன்சில் நிலநடுக்கம்

மணிலா: பிலிப்பீன்சின் மின்டானாவ் மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6ஆகப் பதிவானதாகவும் நிலத்துக்கு அடியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

ஆனால், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9ஆகப் பதிவானதாகவும் நிலத்துக்கு அடியில் 27 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பிலிப்பீன்ஸ் நிலநடுக்க ஆய்வு மையம் கூறியது.

நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏதும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக பிலிப்பீன்ஸ் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

இருப்பினும், நிலநடுக்கத்துக்குப் பிறகு நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று அது எச்சரிக்கை விடுத்தது.

நிலநடுக்கம் காரணமாக இதற்கு முன்பு, மாக்கோ நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட பலரைத் தேடும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலச்சரிவு பிப்ரவரி 6ஆம் தேதியன்று தங்க சுரங்கத்துக்கு வெளியே நிகழ்ந்தது.

மரண எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.

77 பேரைக் காணவில்லை, 32 பேர் காயமடைந்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் கிட்டத்தட்ட 60 மணி நேரம் சிக்கித் தவித்த 3 வயது சிறுமி, பிப்ரவரி 9ஆம் தேதியன்று உயிருடன் மீட்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!