தாய் தவறுதலாக ‘அவன்’ அடுப்பில் வைத்த குழந்தை மரணம்

கான்சஸ் சிட்டி: அமெரிக்காவில் ஒரு தாய் தவறுதலாக ‘அவன்’ எனப்படும் உணவைச் சமைக்கவும் சூடுபடுத்தவும் உதவும் உலை அடுப்பில் தனது குழந்தையை உறங்க வைத்தார். அக்குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் நலனுக்கு ஆபத்து விளைவித்ததாக மிசூரி மாநிலத்தின் கான்rஸ் சிட்டி நகரைச் சேர்ந்த மரியா தாமஸ் என்ற மாதின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஒரு குழந்தை மூச்சு விடாமல் இருந்ததாக வெள்ளிக்கிழமையன்று (9 பிப்ரவரி) காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. குழந்தையின் உடலில் சூட்டுக் காயங்கள் இருந்ததாக மரணத்துக்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணங்களை விவரிக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

குழந்தை சம்பவ இடத்தில் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டது.

தாய் அக்குழந்தையை உறங்க வைக்கும்போது அவர் தவறுதலாக தொட்டிலுக்குப் பதிலாக ‘அவன்’ அடுப்பில் வைத்ததாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது என்பதற்கான விளக்கம் அறிக்கையில் இடம்பெறவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!