வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் நசுங்கி இறந்த சிறுவன்

பெட்டாலிங் ஜெயா: செங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் எட்டு வயது சிறுவன் நசுங்கி மாண்ட துயரச் சம்பவம், மலேசியாவின் கெடா மாநிலத்திலுள்ள பாலிங் பகுதியில் நடந்துள்ளது.

பிப்ரவரி 12ஆம் தேதியன்று காலை 10.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சிறுவன் உயிரிழந்ததாக அறியப்படுகிறது.

வீட்டின் சமையலறைப் பகுதியைப் பெரிதாக்குவதற்காகச் சிறுவனின் தந்தை புதிதாகச் சுவர் ஒன்றை எழுப்பி இருந்தார்.

அதனால், கட்டுமானப் பணிகள் நடக்கும் அவ்விடத்தில் விளையாட வேண்டாம் என்று சிறுவனுக்கு அவரின் தாயார் முன்னரே எச்சரித்திருந்தார்.

சிறுவனின் தந்தை தொழிற்சாலையில் இருந்தபோது, சிறுவனின் தாயார் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது பயங்கர சத்தம் கேட்டு சிறுவனின் தாயார் பார்த்தபோது இடிந்த சுவருக்குக் கீழ் சிறுவனின் உடல் சிக்கி இருந்ததைக் கண்டார்.

சிறுவனின் இளைய சகோதரரும் அதே செங்கல் சுவரால் காயமடைந்தார்.

இதையடுத்து, இரு சிறுவர்களும் மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே சிறுவனின் மரணம் உறுதிசெய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!