செம்மறியாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள்

துபாய்: குவைத்தின் சட்ட அமலாக்க அதிகாரிகள் அண்மையில் நடத்திய சோதனையில் உயிருடன் இருந்த செம்மறியாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரானிலிருந்து டோஹா துறைமுகம் வழியாக வந்த செம்மறியாடுகளில் போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கடத்தல் முறைகளில் இது புதுவகையான ஒரு சிக்கலாக எழுந்துள்ளது.

செம்மறியாடுகளை ஏற்றுமதி செய்வதில் சந்தேகப்படும்படி ஏதோ உள்ளது என்ற துப்பு கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வந்தனர்.

டோஹா துறைமுகத்தை அடைந்தபோது, அந்தச் செம்மறியாடுகளுக்கும் சட்டவிரோதக் கும்பலாக இயங்கிய மூன்று ஆசிய நாட்டவருக்கும் தொடர்பு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

செம்மறியாடுகளின் தோலிலும் குடல்பகுதியிலும் கடத்தல்காரர்கள் போதைப்பொருளைத் திறமையாகப் பதுக்கி வைத்திருந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் ஐந்து கிலோ ‘கிரிஸ்டல் மெத்’, ஒரு கிலோ ‘ஹஷிஷ்’, 20,000 போதை மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!