நியூயார்க் ரயில் நிலையம் துப்பாக்கிச்சூடு: 16 வயது சிறுவன் கைது

நியூயார்க்: அண்மையில் நியூயார்க் நகரின் புரோன்ஸ் பகுதியில் உள்ள சுரங்க ரயிலிலும் ரயில் நிலையத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அதில் ஒருவர் மாண்டதுடன் ஐவர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக 16 வயது சிறுவன் லேங்கல் ஜோன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தமது அடுக்குமாடி வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுச் சென்றபோது அவரை நியூயார்க் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று நியூயார்க் காவல்துறையின் புலன்விசாரணைப் பிரிவுத் தலைவர் ஜோசஃப் கென்னி தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் மெக்சிகோவைச் சேர்ந்த ஊழியரான 35 வயது திரு ஒபெட் பெல்ட்ரன் சாஞ்சேஸ் மாண்டார்.

காயமடைந்தவர்கள் 14 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ரயிலில் இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு மூண்டதை அடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!