திருமண நிகழ்ச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட குண்டர் கும்பல் தலைவர்

லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில், நிழலுலக குண்டர் கும்பல் தலைவரும் சரக்கு வாகனக் கட்டமைப்பின் உரிமையாளருமான அமீர் பலாஜ் திப்பு, திருமண நிகழ்ச்சி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுங் வட்டாரத்தில் பிப்ரவரி 18ஆம் தேதி இச்சம்பவம் நடந்ததாக ஆங்கிலமொழி நாளேடான ‘டான்’ தெரிவித்தது.

பலாஜின் தந்தை அரிஃப் அமீர், தாத்தா ஆகியோரும் இதற்கு முன்னர் வன்முறைச் சம்பவங்களில் பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிக்காரர் பலாஜ் மீதும் மேலும் இரு விருந்தினர் மீதும் சுட்டதில் அவர்கள் படுகாயமடைந்ததாகக் காவல்துறை கூறியது. பலாஜின் பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக பதிலுக்குச் சுட்டதில் துப்பாக்கிக்காரர் மாண்டதாகத் தெரிகிறது.

பலாஜைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியுற்றதாகவும் ஜின்னா மருத்துவமனையில் அவர் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல்காரரோ தாக்குதலுக்கான நோக்கமோ இன்னும் அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை தொடர்கிறது.

அமீர் பலாஜ் திப்பு, பாகிஸ்தானில் மிக அதிக செல்வாக்கு உடையராகவும் மிகவும் அஞ்சத்தக்க மனிதராகவும் கருதப்பட்டவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!