‘மகாதீர் சுயநினைவுடன் இருக்கிறார், கவலைக்கிடமான நிலையில் இல்லை’

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது சுயநினைவுடன் இருப்பதாகவும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் முக்கியமான தகவல் ஏதும் இருந்தால் அதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றும் அவர் பிப்ரவரி 19ஆம் தேதியன்று கூறினார்.

டாக்டர் மகாதீரின் உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக ஊடகத்தில் வலம் வந்த செய்திகளை அவர் மறுத்தார்.

தொற்று காரணமாக ஜனவரி 26ஆம் தேதியன்று தேசிய இதய மருத்துவமனையில் டாக்டர் மகாதீர் அனுமதிக்கப்பட்டார்.

அவர் சில நாள்களுக்கு ஓய்வெடுப்பார் என்று பிப்ரவரி 13ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.

98 வயதான டாக்டர் மகாதீர், மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

தமது கட்சிக்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கை ஒத்திவைக்கும்படி டாக்டர் மகாதீரின் வழக்கறிஞர் திரு மியோர் நூர் ஹைடிர் சுஹாய்மி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!