முன்னாள் சரவாக் முதல்வர் தயீப் மஹ்மூத் காலமானார்

கூச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆளுநருமான அப்துல் தயீப் மஹ்மூத் காலமானார். அவருக்கு 87 வயது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிப்ரவரி 21ஆம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு திரு தயீப்பின் உயிர் பிரிந்ததாக அவரது மகள் திருவாட்டி ஹனிஃபா ஹஜார் தயீப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

திரு தயீப்பின் நல்லுடல் கோலாலம்பூரில் உள்ள தேசிய பள்ளிவாசலில் கிடத்தி வைக்கப்படும் என்றும் அதன் பிறகு சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங்கிற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திரு தயீப் 1981ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை சரவாக்கின் முதல்வராகப் பதவி வகித்தார்.

அதன் பிறகு 2014ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அவர் சரவாக்கின் ஆளுநராக இருந்தார்.

அண்மையில் அவர் தொடர்பான ஒரு சர்ச்சை எழுந்தது.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவரது மனைவி அவரை அங்கிருந்து கடத்திச் சென்றதாக திரு தயீப்பின் பிள்ளைகள் குற்றம் சாட்டினர்.

இதை அவரது மனைவியான திருவாட்டி ரகத் குர்தி தயீப் மறுத்தார்.

அதனைத் தொடர்ந்து, திரு தயீப் அவரது வீட்டில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, திரு தயீப்பிற்கு சரவாக்கின் புதிய சட்டமன்ற வளாகத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்று சரவாக்கின் சுற்றுப்பயணத்துறை, கலைகள் அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!