வார்சா: உக்ரேன் மீது ரஷ்யா முழு வீச்சாகப் போர் தொடுத்து ஈராண்டு ஆகிவிட்டதைக் குறிக்க, முகம் சுளிக்கும் வகையில் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
பிப்ரவரி 24ஆம் தேதியன்று போலந்துக்கு ரஷ்ய தூதராக இருப்பவரது வீட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டு டன்கள் சாணத்தைக் கொட்டியதாகக் கூறினர்.
சாணத்தின் மீது ரத்தக்கறை படிந்த ரஷ்ய கொடி ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தைக் காட்டும் படங்களையும் அவர்கள் வைத்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் அறிந்து வந்தது.
வார்சாவின் வேறொரு பகுதியில் ரஷ்ய அரசதந்திரிகள் தங்கியுள்ள கட்டடம் ஒன்றின் வெளியே அபாய ஒலிகள், துப்பாக்கிச்சூட்டுச் சத்தம், வெடிச்சத்தம் போன்றவற்றை மற்றொரு ஆர்ப்பாட்டக் குழு ஒலிக்கச் செய்தனர்.
ரஷ்ய தூதர்களை மற்ற பால்டிக் மாநிலங்கள் வெளியேற்றிவிட்ட நிலையில், போலந்து இன்னமும் அவ்வாறு செய்யாதிருப்பது அதிருப்தியை நிலவச் செய்துள்ளது.