போலந்தில் ரஷ்ய தூதரின் வீட்டு வெளியே கொட்டப்பட்ட சாணம்

வார்சா: உக்ரேன் மீது ரஷ்யா முழு வீச்சாகப் போர் தொடுத்து ஈராண்டு ஆகிவிட்டதைக் குறிக்க, முகம் சுளிக்கும் வகையில் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

பிப்ரவரி 24ஆம் தேதியன்று போலந்துக்கு ரஷ்ய தூதராக இருப்பவரது வீட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டு டன்கள் சாணத்தைக் கொட்டியதாகக் கூறினர்.

சாணத்தின் மீது ரத்தக்கறை படிந்த ரஷ்ய கொடி ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தைக் காட்டும் படங்களையும் அவர்கள் வைத்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் அறிந்து வந்தது.

வார்சாவின் வேறொரு பகுதியில் ரஷ்ய அரசதந்திரிகள் தங்கியுள்ள கட்டடம் ஒன்றின் வெளியே அபாய ஒலிகள், துப்பாக்கிச்சூட்டுச் சத்தம், வெடிச்சத்தம் போன்றவற்றை மற்றொரு ஆர்ப்பாட்டக் குழு ஒலிக்கச் செய்தனர்.

ரஷ்ய தூதர்களை மற்ற பால்டிக் மாநிலங்கள் வெளியேற்றிவிட்ட நிலையில், போலந்து இன்னமும் அவ்வாறு செய்யாதிருப்பது அதிருப்தியை நிலவச் செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!