2023ல் ஜோகூருக்கு 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகை

ஜோகூர் பாரு: கடந்த ஆண்டு முழுவதுக்கும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்கு 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகையளித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்.

ஜோகூர் சுற்றுப்பயணத்துறை இயக்குநர் ஷஹ்ரில் நிஸாம் அப்துல் ரஹிம் ஞாயிற்றுக்கிழமை இத்தகவலை வெளியிட்டார்.

அதன் பொருட்டு, இவ்வாண்டு 20 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க ஜோகூர் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் சொன்னார்.

மாநிலத்தின் சுற்றுப்பயணத்துறையை வலுப்படுத்த சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் சேர்ந்து ஜோகூர் சுற்றுப்பயணத்துறை அணுக்கமாகப் பணியாற்ற இருப்பதாகவும் அவர் கூறினார்.

சுற்றுப்பயணத்துறை திட்டங்கள் குறித்த அனைத்து மேம்பாடுகளும் ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸியிடம் தெரியப்படுத்தப்படும் என்றார் அவர்.

ஜோகூரில் மேம்படுத்தப்பட்டுவரும் சுற்றுப்பயணத்துறை நிலையங்களில் ஜோகூர் விலங்கியல் பூங்காவும் தேசிய பூங்காவும் அடங்கும் என்று திரு ஷஹ்ரில் நிஸாம் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!