கட்சித் தாவலைத் தடுக்க பெர்சத்து நடவடிக்கை

சிலாயாங்: தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுக்க மலேசியாவின் பெர்சத்து கட்சி மார்ச் 2ஆம் தேதியன்று அவசரகாலப் பொதுக் கூட்டத்தை நடத்தியது.

இதற்கு அக்கட்சியின் தலைவரும் முன்னாள் மலேசியப் பிரதமருமான முகைதீன் யாசின் தலைமை தாங்கினார்.

மலேசியாவெங்கும் பெர்சத்துவைப் பிரதிநிதிக்கும் ஏறத்தாழ 1,000 பேராளர்கள் அவசரகாலப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கட்சியின் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்கவும் அவற்றை நிறைவேற்றவும் கூட்டம் நடத்தப்பட்டது.

எதிர் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு பெர்சத்துவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் விதிமுறை மாற்றத்தின்படி அவர்களது கட்சி உறுப்பியம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி ஒதுக்கீடு, அரசாங்கத்தில் பதவி ஆகியவற்றுக்காக பெர்சத்துவைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமிற்குப் பகிரங்கமாகத் தங்கள் ஆதரவைத் தெரிவித்ததை அடுத்து, கட்சித் தாவலுக்கு எதிராக பெர்சத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியுடன் இணைந்தால் கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் அவர்களது தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று பெர்சத்து கட்சியின் தலைவர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!