மலேசியாவில் ‘பேஸ்மேக்கர்’ பொருத்தியபின் நாடு திரும்பும் நார்வே மன்னர்

ஓஸ்லோ: நார்வே மன்னர் ஹெரால்ட், மார்ச் 3ஆம் தேதி மலேசிய மருத்துவமனையிலிருந்து, நோயாளிகளைக் கொண்டுசெல்ல உதவும் மருத்துவ விமானம் மூலம் நாடு திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்காவி விமான நிலையத்திலிருந்து மலேசிய நேரப்படி பிற்பகல் 1.05 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டது.

87 வயதாகும் மன்னர் ஹெரால்டிற்கு மலேசிய மருத்துவமனையில் சனிக்கிழமை (மார்ச் 2) தற்காலிகமாக இதயத்தில் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

தனிப்பட்ட முறையில் விடுமுறைப் பயணமாக லங்காவி சென்றபோது சென்ற வாரத் தொடக்கத்தில் அவருக்கு கிருமித்தொற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக நார்வே அரசகுடும்பத்தினர் கூறினர்.

“இதயத் துடிப்பு மெதுவாக இருந்ததால் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. மார்ச் 2ஆம் தேதி காலை அதுகுறித்து முடிவெடுக்கப்பட்டு, அந்த சிகிச்சை வெற்றிகரமக மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்று நார்வே அரண்மனை அறிக்கை கூறியது.

மன்னரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னருடன் அரசியார் சோன்ஜாவும் பயணம் செய்வதாகவும் நார்வே திரும்பியதும் மன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர் இரண்டு வாரங்கள் மருத்துவ விடுப்பிலிருப்பார் என்று அரண்மனை அறிக்கை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!