சரிவிலிருந்து ஏற்றம் கண்ட ரிங்கிட்

கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிந்து வந்த நிலையில் தற்போது ஏற்றம் கண்டுள்ளது. அந்நாட்டு அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பை அந்நாடு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

ஆசிய பங்குச்சந்தையில் மார்ச் 4ஆம் தேதி தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான வர்த்தகத்தில் 0.6 விழுக்காடு உயர்ந்து மலேசிய ரிங்கிட் 4.7185க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக ரிங்கிட் கிட்டத்தட்ட 3.5186 என்ற மதிப்பில் மார்ச் 4ஆம் தேதி பிற்பகல் 12.55 மணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

இது, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக வர்த்தகம் செய்யப்பட்ட ரிங்கிட்டை விட 0.2 விழுக்காடு அதிகம்.

வெளிநாட்டு முதலீட்டிலிருந்து வரும் வருவாயை ரிங்கிட்டாக மாற்ற அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களை அந்நாட்டு அரசு வலியுறுத்தியதன் மூலம் பங்குச்சந்தையில் ரிங்கிட்டின் மதிப்பு உயரத் தொடங்கியது.

மலேசியப் பொருளியல் மேம்பாடு காணும் எனக் கருதப்படும் நிலையில் ரிங்கிட்டின் மதிப்பு வலுவாக இருக்குமென்று மலேசிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!