பெர்லின்: மருத்துவர்கள் எவ்வளவு கூறியும் அதைச் செவிசாய்க்காமல் அவர்களது ஆலோசனைக்கு எதிராக ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயது ஆடவர் 217 முறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி அவருக்குத் தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
கொவிட்-19 தடுப்பூசியை அவர் 29 மாதங்களில் 217 முறை போட்டுக்கொண்டார்.
இருப்பினும், அதனால் அவருக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று எர்லேன்கன்-நியூரெம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க அளவுக்கு அதிகமான தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதில்லை என்று அந்த மருத்துவ ஆய்வாளர்கள் கூறினர்.
தற்போதைய நிலவரப்படி கொவிட்-19 கிருமித்தொற்றிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள மூன்று முறை போடப்படும் தடுப்பூசி போதுமானது என்றும் எளிதில் நோய்வாய்ப்படக்கூடியவர்கள் அவ்வப்போது கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கூடுதல் தடுப்பூசி தேவை என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று அவர்கள் கூறினர்.