பெர்லிஸ் மாநிலத்தின் கடைசி அதிர்‌ஷ்ட குலுக்கல் கடை மூடப்பட்டது

கோலாலம்பூர்: மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தின் கடைசி அதிர்‌ஷ்ட குலுக்கல் கடை
மார்ச் 6ஆம் தேதியுடன் மூடப்பட்டது.

இதன் மூலம் மலேசியாவில் சூதாட்டம் இல்லாத நான்காவது மாநிலமாக பெர்லிஸ் மாறியுள்ளது.

தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள பாடாங் பெசார் நகரில் உள்ள ‘டா மா காய்’ கடையின் உரிமம் மார்ச் 6ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அந்தக் கடை மூடப்பட்டது.

இதற்கு முன்னர் பெர்ஸிஸ் மாநிலத்தில் 6 அதிர்‌ஷ்ட குலுக்கல் கடைகள் இருந்தன. அவற்றின் உரிமத்தை அரசாங்கம் புதுப்பிக்காது என்று அறிவித்தது. அதனால் அவை 2023 ஆண்டில் கட்டங்கட்டமாக மூடப்பட்டன.

சூதாட்ட கடைகள் மூடப்படுவதால் பொருளியல் ரீதியாக இழப்புகள் இருக்கிறது. இருப்பினும் சமூக நலன் கருதியும் பொதுமக்களின் வாழ்க்கையை கருத்தில்கொண்டு இந்த முடிவெடுத்ததாக அதிகாரிகள் கூறினர்.

மலேசியாவின் கிளந்தான், திரங்கானு, கெடா மாநிலங்களில் சூதாட்ட கடைகள் இல்லை.

கிளந்தான் மாநிலத்தில் 1990 ஆண்டு முதலும் திரங்கானுவில் 2020ஆம் ஆண்டு முதலும் சூதாட்ட கடைகள் இல்லை. கெடா மாநிலம் கடந்த ஆண்டு தடை விதித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!