ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட கடற்படை வீரரின் தந்தை கைது: பைடன் உரையின்போது பரபரப்பு

வா‌ஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் ஒருவரின் தந்தை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு நடப்பு பற்றி உரையாற்றிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

ஸ்டீவ் நிக்கூய் எனும் அந்நபர் மீது சற்று தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதென அமெரிக்க நாடாளுமன்றக் காவல்துறையினர் தெரிவித்தனர். 2021ஆம் ஆண்டு அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியபோது திரு நிக்கூயின் மகன் கொல்லப்பட்டார்.

51 வயது நிக்கூய், திரு பைடன் உரையாற்றியபோது ‘ஆபி கேட், ஆபி கேட்’ என்று கூச்சலிட்டார். தனது மகன் லான்ஸ் கார்ப்பரல் கரீம் நிக்கூய் மாண்ட இடத்தைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூச்சலிட்டார்.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த கடைசி சில நாள்களில் திரு நிக்கூயின் மகன் உட்பட 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஃபுளோரிடா மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் பிரையன் மாஸ்ட் என்ற அரசியல் தலைவரின் அழைப்பின்பேரில் திரு நிக்கூய் அதிபர் உரையாற்றிய நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!