விக்டோரியா: சைதன்யா சுவேதா மதகனி, 30, என்பவரின் உடல், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள பக்லி பகுதியில் இருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தப் பகுதியில், சக்கரங்களுடைய பச்சைநிறக் குப்பைத்தொட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் அந்த இளம் தாயின் உடல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பெண்ணின் உடலை சனிக்கிழமை பிற்பகல் வாக்கில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பெண்ணின் கணவர் அசோக் ராஜ் வரிகுப்பலா அண்மையில் அவர்களின் இளம் மகனுடன் இந்தியாவுக்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, திரு வரிகுப்பலா காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்று கூறப்படுகிறது.
பக்லி பகுதியிலுள்ள மவுண்ட் பொல்லோக் ரோடு, மெல்பர்னின் பாயிண்ட் கூக்கிலுள்ள ஒரு குடியிருப்பு ஆகிய இரண்டையும் குற்றம் நிகழ்ந்த இடங்களாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், திருவாட்டி மதகனியின் நண்பர்கள் அவரின் மரணத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். குறை கூற முடியாத அளவுக்கு இறந்தவர் ஒரு சிறந்த மனிதர் என்றும் தம் இளம் மகனுக்காக வாழ்ந்த ஒரு சிறந்த தாய் என்றும் நண்பர்கள் அவரை வர்ணித்தனர்.