பிலிப்பீன்ஸ் மோசடி நிலையத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் மீட்பு

மணிலா: பிலிப்பீன்சில் உள்ள இணைய மோசடி நிலையத்தில் கட்டாயமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானோர் மார்ச் 14ஆம் தேதி காவல்துறை மேற்கொண்ட சோதனையில் மீட்கப்பட்டுள்ளனர்.

சோதனையின்போது சந்தேக நபர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

மணிலாவுக்கு வடக்கே பம்பான் எனுமிடத்தில் இணைய விளையாட்டு நிறுவனம் என்ற போர்வையில் செயல்பட்ட மோசடி நிறுவனம் 100,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

அங்கிருந்து தப்பியதாகக் கூறும் வியட்னாமியர், பிலிப்பீன்ஸ் காவல்துறைக்குத் தகவல் தந்தார்.

அதையடுத்து, ஆட்கடத்தலுக்கு ஆளானோர் இணைய மோசடி வேலைகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டதாகக் காவல்துறை கூறியது.

இணையக் காதல் மோசடி, மின்னிலக்க நாணய மோசடி உட்படப் பல்வேறு மோசடிச் செயல்களில் அந்த மோசடிக்காரர்கள் ஈடுபடுவதாக மீட்கப்பட்டோர் காவல்துறையிடம் கூறினர்.

பாதிக்கப்பட்டோரின் கடப்பிதழ்களை மோசடிக்காரர்கள் பறிமுதல் செய்ததாகவும் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு வேலை செய்யாதோர் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

மீட்கப்பட்டோரில் 432 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், 371 பேர் ஃபிலிப்பினோக்கள், 57 பேர் வியட்னாமியர்கள், எட்டுப் பேர் மலேசியர்கள், மூவர் தைவானைச் சேர்ந்தவர்கள், இருவர் இந்தோனீசியர்கள், இருவர் ருவாண்டாவைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!