நோன்பு துறக்க வைத்திருந்த பழச்சாற்றைப் பருகிய சக ஊழியரைக் கொன்ற ஆடவர்

ஷா அலாம்: நோன்பு துறப்பதற்குத் தமக்காக வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சுப் பழச்சாற்றைச் சக ஊழியர் அருந்தியதால் அவரை ஆடவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்றார்.

இந்தச் சம்பவம் மலேசியாவின் ஷா அலாம் நகரில் உள்ள தொழிற்சாலை ஊழியர் விடுதி ஒன்றில் மார்ச் 19ஆம் தேதி இரவு சுமார் 7.20 மணிக்கு நிகழ்ந்தது.

கத்தியால் பலமுறை குத்தப்பட்ட 49 வயது பங்ளாதேஷிய ஊழியர் சம்பவ இடத்தில் மாண்டார்.

ஊழியர் தங்குமிடமாக கப்பல் கொள்கலன் ஒன்று மாற்றி அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் அந்த பங்ளாதேஷியரும் 51 வயது பாகிஸ்தான் ஆடவரும் தங்கினர்.

அந்த பாகிஸ்தானிய ஆடவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தியை அதிகாரிகள் விசாரணைக்காகக் கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட ஆடவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!