திருடுவதற்குமுன் ‘யோகா’ பயிற்சி செய்த பெண்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர பிலிப்பா’ஸ் பேக்கரி நிறுவனத் தலைமையகத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சம்பவத்தில், பெண் ஒருவர் திருடுவதற்குமுன் ‘யோகா’ பயிற்சியில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராப் பதிவுகள் மூலம் தெரியவந்தது.

அந்தப் பெண் பாதாம் ‘குரோய்சான்’, காலணி, தூய்மைப்படுத்த உதவும் பொருள்கள் ஆகியவற்றைத் திருடியதாக மார்ச் 20 ஆம் தேதி ஆஸ்திரேலியக் காவல்துறை தெரிவித்தது.

பிலிப்பா’ஸ் பேக்கரி நிறுவனக் கார் நிறுத்துமிடத்தில் இரவுநேரத்தில், கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு அந்தப் பெண் பயிற்சியில் ஈடுபட்டார்.

அவர்மீது திருட்டு, பூட்டிய இடத்தில் புகுந்து திருடியது, திருடத் தேவையான பொருள்களுடன் திருடச்சென்றது ஆகியவை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மே 22ஆம் தேதி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார்.

திருட்டுச் சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமராப் பதிவுகள் வியப்பளிப்பதாக பிலிப்பா’ஸ் பேக்கரி நிறுவனம் கூறியது.

“பூட்டிய இடத்தில் திருடச் செல்வதற்கு ‘யோகா’ முக்கியம் போலிருக்கிறது,” என்றும் அது இன்ஸ்டகிராமில் பதிவிட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!