பாகிஸ்தானுக்கு $1.1 பில்லியன் நிதியுதவி

இஸ்லாமாபாத்: பொருளியல் சிக்கலில் இருந்து மீண்டு வர பாகிஸ்தானுக்கு அனைத்துலகப் பண நிதியம் உதவி வருகிறது.

இந்நிலையில் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை பண நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் பெறவுள்ளது.

தற்போது இரண்டு தரப்புகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விரைவில் ஒப்பந்தம் முழுமையாக ஒப்புதல் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக நிதி பாகிஸ்தானுக்கு நிதியம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

கடன் சிக்கலில் இருந்த பொருளியலை முன்னேற்ற கடந்த ஆண்டு அனைத்துலக பண நிதியத்திடம் பாகிஸ்தான் 3 பில்லியன் டாலர் நிதியுதவி கேட்டது. அதைத்தொடர்ந்து நிதியம் இதுவரை 1.9 பில்லியன் டாலர் நிதி கொடுத்துள்ளது.

இந்த நிதியைத் தவிர்த்து மேலும் புதிதாக நிதியுதவி பெறவும் பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!