உலகின் ஆக விலை உயர்ந்த மருந்து: $5.7 மில்லியன் மரபணு சிகிச்சை

தோக்கியோ/லண்டன்/பாஸ்டன்: மிக அரியதொரு நோய்க்கெனப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு சிகிச்சையின் விலை, 4.25 மில்லியன் அமெரிக்க டாலர் (S$5.7 மி.). இதுவே, உலகின் ஆக விலை உயர்ந்த மருந்து.

பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு ‘எம்எல்டி’ எனப்படும் ஒரு குறிப்பிட்ட நோய் வருவதற்கான அடிப்படை காரணத்தைச் சரிசெய்ய, ‘லென்மெல்டி’ எனப்படும் இந்த ஒருமுறை சிகிச்சைக்கு மார்ச் 18ஆம் தேதியன்று அமெரிக்காவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கொடிய நோயாகக் கருதப்படும் ‘எம்எல்டி’, குழந்தைகள் நடக்கும் ஆற்றலையும் பேசும் திறனையும் இழக்கக் காரணமாக இருந்துள்ளது.

உயிருடன் பிறக்கும் 100,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த ‘எல்எல்டி’ பாதிப்பு ஏற்படலாம். அமெரிக்காவில் ஆண்டுக்கு 40க்கும் குறைவான சிறார்களை இது பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அதிகப்படியான விலைகளைக் கொண்டுள்ள மரபணு மருத்துவத் துறை, பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

இருப்பினும், நோயைத் தீர்க்கும் ஆற்றல் காரணமாகவும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறைக்கு இதனால் பணம் மிச்சமாவதாகவும் சமூக அளவில் இதர பலன்கள் இருப்பதாகவும் மருந்துப் பொருள் நிறுவனங்கள் சுட்டுகின்றன.

இதற்குமுன் ஆக விலை உயர்ந்த மருந்தின் மதிப்பு $3.5 மில்லியனாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!